டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புக்கு நாங்களே காரணம்- திடீர் உரிமை கோரும் இந்தியன் முஜாஹிதீன்
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புக்கு நாங்களே காரணம் என்று ஹூஜி அமைப்பின் பெயரில் இ மெயில் வந்த நிலையில் தற்போது இந்த சம்பவத்திற்கு தாங்களே காரணம் என்று இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு கூறியுள்ளது. இதுவும் இமெயில் மூலம் வந்த தகவலாகும்.
இந்த இமெயில் [email protected] என்ற முகவரியிலிருந்து வந்துள்ளது. இந்தியில் எழுதப்பட்டுள்ளது. அதில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியன் முஜாஹிதீன் உள்ளது. டெல்லி வணிக வளாகம் ஒன்றில் வியாழக்கிழமை இன்னொரு தாக்குதல் நடத்த இந்தியன் முஜாஹிதீன் திட்டமிட்டுள்ளது. புதன்கிழமையன்று கோர்ட்டுக்கு நிறைய கூட்டம் வரும் என்பதால் அந்த நாளில் தாக்குதல் நடத்த இந்தியன் முஜாஹிதீன் திட்டமிட்டது என்று அந்த மெயிலில் கூறப்பட்டுள்ளது.
இந்த மெயில் யாரால் அனுப்பப்பட்டது என்பது தெரியவில்லை. முஜாஹிதீன் அமைப்பிடமிருந்து வந்ததா அல்லது வேறு யாரேனும் திசை திருப்ப அனுப்பினரா என்பது தெரியவில்லை.
இதற்கு முன்பு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பலவற்றில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு சம்பவம் நடந்த உடனேயே மெயில் அனுப்பியுள்ளது. மேலும் அவை பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது உருதில்தான் இருக்கும். ஆனால் இந்த மெயில் இந்தியில் இருப்பதால் திசை திருப்பும் மெயிலாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறார்கள் போலீஸார்,.
ஏற்கனவே ஹூஜி பெயரில் வந்த இமெயில் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது புதிதாக வந்துள்ள மெயிலால் குழப்பம் அதிகரித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications