நல்லகண்ணு தாக்கப்படவில்லை: தா.பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தாக்கப்படவில்லை என்று அக்கட்சியின் மாநில செயலர் தா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆர்.நல்லகண்ணு மணல் கொள்ளையை எதிர்த்து போராடியதால் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார் என்ற செய்தி சில ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்லகண்ணு வாடகை கார் ஒன்றில் திருமணத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். காருக்கு கட்ட வேண்டிய தவணை பாக்கிக்காக காரை நிறுத்தியிருக்கிறார்கள். நல்லகண்ணு பத்திரமாக அழைத்து செல்லப்பட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தா பாண்டியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications