தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடம் சென்ற வேன் மீது லாரி மோதி 4 பேர் பலி
மதுரை: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு இடத்திற்கு சென்ற 4 பேர் சாலை விபத்தில் சிக்கி பலியாகினர்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுநாயக்கன்பட்டி அருகே உள்ளது கரட்டழகன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த சிலர் மகேந்திரா வாகனத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு புறப்பட்டு சென்றனர். மதுரை துவரிமானை கடந்து இவர்கள் சென்றபோது, பரமக்குடியில் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, அவர்கள் மீண்டும் ஊர் திரும்ப முடிவு செய்தனர்.
இதையடுத்து, தாங்கள் வந்த வாகனத்தை துவரிமான் - சமயநல்லூர் நான்கு வழிச் சாலையில் தவறான திசையில் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. அப்போது சமயநல்லூர் பகுதியிலிருந்து வந்த லாரி ஒன்று இந்த வாகனத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த செந்தில்,மூர்த்தி, விக்னேஷ்வரன், முனியசாமி ஆகியோர் பரிதாபமாக பலியானர். விபத்து குறித்து, நாகமலைப் புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications