ஊத்துமலை காவல் நிலையத்தில் டூமீல், டுமீல்: மக்களிடையே பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சுரண்டை: ஊத்துமலை காவல் நிலையத்தில் இன்று காலை திடீரென துப்பாக்கி வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சுரண்டை அருகேயுள்ள ஊத்துமலை காவல் நிலையத்தில் இன்று காலை திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் பீதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு விரைந்தனர். அங்கு போலீசாரிடம் விவரத்தை கேட்டனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியை துணியால் துடைக்கும் போது தவறுதலாக வெடித்துவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் போலீசாரின் விளக்கம் மக்களுக்கு சந்தேகத்தை கிளப்பியது.
இது குறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவருக்கும் மழுப்பலான பதில் தான் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications