ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கு: முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு ஜாமீன்
நாகர்கோவில்: முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ் ராஜன். திமுகவைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அஜிதாவுக்கு சொந்தமான சொத்தை விற்பனை செய்வது தொடர்பாக தயாசிங் என்பவரை மிரட்டியதாக சுரேஜ்ராஜன் மீது வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
திமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாகப் பேசியதாக அவர் மீது களியக்காவிளை போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு முறை முன்ஜாமீன் பெற்றிருந்த சுரேஷ் ராஜன் குழித்துறை நீதிமன்றத்தில் சரணடைந்தார். நாங்குநேரி காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் மாரியப்பன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications