என்ன மாதிரியான பாதுகாப்பு தேவை?- ஜெயலலிதா தரப்பு மனு மூலம் தெரிவிக்க பெங்களூர் கோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் தனி கோர்ட்டில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் ஜெயலலிதா. ஆனால் இதை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும், அக்டோபர் 20ம் தேதி அவர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா பெங்களூர் வரும்போது அவருக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு தேவைப்படும் என்பதை வருகிற 21ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று இன்று ஜெயலலிதாவின் வக்கீலுக்கு கோர்ட் உத்தரவிட்டது.
முன்னதாக 10 நாள் அவகாசம் தேவை என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல் கோரிக்கை வைத்தார். ஆனால் அதை கோர்ட் நிராகரித்து விட்டது.












Click it and Unblock the Notifications