பாகிஸ்தானில் தொடார் மழையினால் வெள்ளம்: 200 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் கடந்த மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டதாக தெரிகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருக்கலாம் என தெரிகிறது. பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதல், எல்லா துறைகளிலும் ஊழல், அதிகநேர மின்தடை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இடையே வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள அபாயங்களால் பாகிஸ்தான் ஆளுங்கட்சி செய்வது அறியாமல் திகைத்து வருகிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, சிந்து மாநிலத்தில் ஏற்கனவே மோசமாக காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் தற்போது அங்கு வெள்ளமும் ஏற்பட்டு நிலைமையை இன்னும் பரிதாபகரமாக மாற்றி உள்ளது, என்றனர்.

இதுகுறித்து செஞ்சிலுவை சங்கத்தினர் கூறியதாவது, சில மாதங்களாக பாகிஸ்தானின் சில பகுதிகளில் மழைப் பெய்து வருவதால் அங்கு சுகாதார குறைபாடு ஏற்பட்டுள்ளதால் தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்குவதற்கு நிலையான வீடு மற்றும் சரியான உணவின்றி பல மாதங்கள் தவித்தனர். இந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 20 லட்சம் பஞ்சு மூட்டைகள் வீணாகி உள்ளது.

மேலும் நாட்டின் 13 சதவீத உணவுப் பொருட்கள் வீணாகி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மழைநீர் விரைவாக வடிந்து செல்வதற்கு சரியான வாய்க்கால் வசதிகள் இல்லாததால் கடலுக்கு செல்லும் வெள்ள அளவு குறைவாக உள்ளது என, அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+