பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்- ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் விசாரிப்பார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரமக்குடி வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத் விசாரணை நடத்துவார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பரமக்குடி சம்பவம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த நிலையில் கமிஷன் குறித்த விவரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் இந்த விசாரணைக் கமிஷனுக்கு தலைவராக இருந்து விசாரணை நடத்துவார். 2 மாதத்தில் அவர் விசாரணையை முடித்து அரசிடம் பரிந்துரை அறிக்கையை அளிப்பார்.அதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியில், தியாகி இம்மானுவேல் சேகரன் குரு பூஜைக்காக கிளம்பிய தலித் தலைவர் ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பரமக்குடி, பார்த்திபனூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் வன்முறை மூண்டது. இதில் பரமக்குடியில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரத்தைத் தொடர்ந்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+