அல் கொய்தா தலைவர் ஜவாஹிரி பாகிஸ்தானில் தான் உள்ளார்: அமெரிக்கா தகவல்
இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி இன்னும் பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்று பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்ற பிறகு இரண்டாவது இடத்தில் இருந்த ஜவாஹிரி தலைவரானார். ஒசாமா இறந்துவிட்டாலும் அல் கொய்தா தீவிரவாதிகளைத் தேடும் பணியை அமெரி்க்கா நிறுத்திவிடவில்லை. முதலில் ஒசாமாவைத் தேடியது, தற்போது ஜவாஹிரியைத் தேடி வருகிறது.
இந்நிலையில் ஜவாஹிரி பாகிஸ்தானில் இருப்பதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
ஜாஹிரி பாகிஸ்தானைத் தவிர வேறு எங்கும் இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் வரவில்லை என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் தெரிவித்துள்ளார்.
9/11 தாக்குதல்களுக்குப் பிறகு அமெரி்க்கா தீவிரவாதத்திற்கு எதிரான போரைத் துவங்கி நடத்தி வருகிறது. இதனால் ஒசாமைவைப் போன்றே ஜவாஹிரியும் தலைமறைவாக உள்ளார்.
9/11 தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அல் கொய்தா ஒரு வீடியோ வெளியிட்டது. அதில் பின் லேடன் பேசியிருக்கிறார். ஜவாஹிரி அமெரிக்காவை மிரட்டி இருக்கிறார். இந்த ஆண்டு அரபிகளுக்கு வசந்தகாலம், தொடர்ந்து அமெரிக்கர்களுக்கு மந்தமான கடுங்குளிர் காலம் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் ஜவாஹிரியின் புகைப்படம் மட்டும் தான் காண்பிக்கப்பட்டுள்ளது. அல் கொய்தாவின் ஊடகமான அஸ்ஸஹாப் இதை வெளியிட்டது. ஜிஹாதி இணையதளத்தில் கடந்த திங்கட்கிழமை இந்த வீடியோ வெளியிடப்பட்டது.












Click it and Unblock the Notifications