மனைவியைப் பிரிந்தார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா

ஜம்மு, காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா(41) தனது மனைவி பாயலை விட்டுப் பிரிந்துள்ளார். 17 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பிறகு அவர்கள் பிரிந்துள்ளனர்.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நானும், என் மனைவியும் பிரிந்தது உண்மை தான். எதற்காக பிரிந்தோம், இனி என்ன செய்யவிருக்கிறோம் என்று வரும் தகவல்களில் உண்மையில்லை. அவை அனைவரையும் காயப்படுத்துவதாக உள்ளன.
எனது சொந்த வாழ்க்கையை அதிலும் குறிப்பாக எனது திருமண வாழ்க்கைப் பற்றி ஊடகங்கள் தங்கள் ஊகங்களை வெளியிடுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
நான் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக வரும் தகவல்கள் அனைத்தும் பொய். ஒரு பொய்யைத் திருப்பித் திருப்பி சொல்வதற்கு முன் அது உண்மையா என்று என்னைக் கேட்க ஏன் யாருமே முயற்சிக்கவில்லை. இந்த யூகங்களால் பலர் மனது காயப்படுகிறது.
என் குடும்ப வாழ்க்கை என் தனிப்பட்ட விஷயம். நானும், எனது மனைவியும் பிரிந்த செய்திகளில் என் மகன்களின் புகைப்படத்தைப் பார்க்க விரும்பவில்லை. இதை ஊடகங்கள் புரிந்து கொள்ளும் என்று நினைக்கிறேன்.
என் சொந்த வாழ்க்கைப் பிரச்சனையால் எனது அரசியல் பணிகள் பாதிக்காது. இந்த விவகாரம் குறி்த்து நானோ, எனது குடும்பமோ இனி எந்த அறிக்கையும் வெளியிட மாட்டோம், எந்த கேள்விக்கும் பதில் அளிக்க மாட்டோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications