கர்நாடகம்: முறைகேடான நிலம்- சிக்கலில் மாட்டிய லோக் ஆயுக்தா நீதிபதி
Subscribe to Oneindia Tamil

இது குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான பாட்டீல் சமீபத்தில் கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதியாகப் பதவியேற்றார்.
இந்த நிலையில் பாட்டீலும், அவரது மனைவியும் பெங்களூரில் விதிமுறைகளை மீறி
1982, 1994 மற்றும் 2006ம் ஆண்டுகளில் அரசிடமிருந்து நிலங்களை வாங்கியது தெரியவந்துள்ளது.
சட்ட விதிகளின்படி ஒருவர் ஒரு அரசிடமிருந்து ஒரு நிலத்தை மட்டுமே பெற முடியும். ஆனால், இவர் கர்நாடக அரசிடமிருந்து மட்டும் பெங்களூரில் 3 நிலங்களை வாங்கியுள்ளார்.
இந் நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாட்டீல், தனது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட சொத்துகளை அவர் திருப்பிக் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் தான் முன்னாள் பாஜக முதல்வர் எதியூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications