திருச்சி இடைத் தேர்தலில் இஸ்லாமிய வேட்பாளரையே நிறுத்த வேண்டும்- தவ்ஹீத் ஜமாத்
சென்னை: திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் இஸ்லாமிய வேட்பாளரை அதிமுக நிறுத்ததாது இஸ்லாமியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து இக்கட்சி கூறுகையில், நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருப்பது ஒரு நாடகமாகும். குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பெரும் வன்முறை மற்றும் இனக் கலவரம் வெடிக்க அவர்தான் முதல் காரணம். இந்த நிலையில் தற்போது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் என்று அவர் கூறுவது கண் துடைப்பாகும். அவரது செயல்களை ஒருபோதும் இஸ்லாமியர்கள் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள்.
மோடியின் உண்ணாவிரதத்தை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தியதும், அதிமுக சார்பில் பிரதிநிதிகளை அனுப்பியதும் கண்டனத்துக்குரியதாகும்.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் இஸ்லாமியரையே வேட்பாளராக அதிமுக நிறுத்தியிருக்க வேண்டும். மாறாக வேறு வேட்பாளரை நிறுத்தியிருப்பது இஸ்லாமியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதேபோல, 10 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும் ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக் கூட அதிமுக அறிவிக்காதது இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. 2 வேட்பாளர்களை இஸ்லாமியர்களாக அதிமுக நிறுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications