குவிந்து கிடக்கும் வழக்குகளே உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்புக்குக் காரணம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: பல்வேறு வழக்குகள் காரணமாகவே உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி வார்டுகளின் மறுவரையறை, அம்பத்தூர் நகராட்சியை சென்னையுடன் இணைத்தது, திருச்சி மாநகராட்சி வார்டுகளின் மறுவரையறை ஆகியவற்றை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் எப்போது தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை. அதில் தீர்ப்பு வந்தால்தான் தேர்தலை நடத்துவது சுலபமாக இருக்கும். எனவேதான் உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிக்காமல் மாநில தேர்தல் ஆணையம் அமைதி காப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று நேற்று பரபரப்பு ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம். ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த சத்தமும் இல்லை.












Click it and Unblock the Notifications