பெங்களூர்: சிலிண்டர் வெடித்ததில் திருமண மண்டபம் இடிந்து 3 பேர் காயம்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் மண்டபம் இடிந்து விழுந்தது. இதில் மீட்புப் பணியில் ஈடுபட்ட 3 தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தனர்.
பெங்களூர் சுமனஹல்லியில் உள்ளது லக்ஷ்மி- வெங்கடேஸ்வரா திருமண மண்டபம். இந்த மண்டபத்தில் இன்று மதியம் 1. 30 மணிக்கு மேல் 2 மணிக்குள் கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதையடுத்து கல்யாண மண்டபம் கொளுந்து விட்டு எரிந்தது. இதில் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதையடுத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
அப்போது இடிபாடுகளில் சிக்கிய 4 பேரில் 3 பேர் மீட்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். இடிபாடுகளுக்குள் மேலும் சிலரும் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கமிஷனர், கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications