தமிழக ஆளுநர் ரோசையா நாளை ஊட்டி வருகிறார்
கோவை: தமிழக ஆளுநர் ரோசைய்யா ஊட்டிக்கு நாளை (வியாழன்) வருகின்றார். இதற்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநராக ரோசய்யா பொறுப்பேற்றபின், முதல் முறையாக, நாளை ஊட்டிக்கு வருகிறார். இன்று மாலை, சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை வர உள்ளார். நாளை (வியாழக்கிழமை) கோவையில் நடக்கும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றபின், மாலை கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி செல்கிறார்.
ஊட்டி ராஜ்பவனில் தங்கும் ஆளுநர் ரோசைய்யா 23ம் தேதி, தொட்டபெட்டா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்காவை பார்வையிடுகிறார். பின்பு 24ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிடுகின்றார். அப்பர் கார்குடி ஓய்வு விடுதியில் ஓய்வு எடுத்தபின், ஊட்டிக்கு திரும்புகின்றார். அன்று மாலை கோவைக்கு திரும்புகிறார்.
ஆளுநர் ரோசைய்யாவின் வருகையை முன்னிட்டு, கோவை மற்றும் ஊட்டி பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications