பரமக்குடி சம்பவம்-போலீஸுக்குப் பயந்து ஓடியவர் பாம்பு கடித்தும, இன்னொருவர் மாரடைப்பிலும் மரணம்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு ஏற்கனவே 6 பேர் பலியான நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தேடி வந்ததால் பயந்து போன இருவர் தப்பி ஓடினர். அப்போது அவர்களில் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டும், இன்னொருவர் பாம்பு கொத்தியும் பரிதாபமாக பலியானார்கள்.

பரமக்குடி சம்பவத்தைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் ரோந்தும் போய் வருகின்றனர். அதேபோல தொருவளூர் என்ற கிராமத்தில் போலீஸார் சமீரபத்தில் சிலரைத் தேடி வந்தனர்.

இதையடுத்து பயந்து போன வேலு என்பவர் பதட்டமடைந்து வேகமாக தப்பி ஓடினார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறலும், மாரடைப்பும் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அந்தக் கிராமத்தில் சோகம் நிலவுகிறது.

இதேபோல களக்குடி என்ற கிராமத்தில் போலீஸார் பிடித்துச் சென்று விடுவார்களோ என்ற பயத்தில் வயலில் பதுங்கியிருந்த காளியப்பன் என்பவர் பாம்பு கொத்தி பரிதாபமாக இறுந்து போனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+