கரூரில் மது வாங்கி கொடுத்து நிலத்தை பறித்த 5 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கரூர்: போதையில் இருந்த நபரிடம் 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் பெரியகுளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் காமாட்சி பெரியசாமி என்கிற கோகுல்(25) . இவர் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் பெரியகுளத்துப்பாளையத்தை சேர்ந்த 8 பேர் தனக்கு மதுவாங்கி கொடுத்து தனக்கு சொந்தமான 4.4 ஏக்கர் நிலத்தை தங்கள் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டனர்.
இந்த நிலத்தின் மதிப்பு 16.31 லட்சம் ரூபாய். எனவே, இந்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப் பதிந்து நடராஜன் (47), பிரபு (27), பெரியசாமி (50), மோகன்ராஜ் (31), செல்வராஜ் (40) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications