உக்ரைன்- கொழுக்கட்டை சாப்பிடும் போட்டியில் வென்ற 77 வயது முதியவர் மரணம்

தென்கிழக்கு உக்ரைனில் உள்ளது டோக்மாக் நகரம். இந்த நகரம் துவங்கப்பட்ட நினைவு நாள் கொண்டாட்டங்கள் நடந்தது. அப்போது யார் குறைந்த நேரத்தில் உக்ரைனின் பாரம்பரிய உணவான டம்ப்ளிங்கை (கொழுக்கட்டைகள்) அதிக அளவில் சாப்பிடுகிறார்கள் என்று பார்க்கும் போட்டி நடந்தது. உருளைக்கிழங்கு அடைத்து கிரீமில் முக்கிய கொழுக்கட்டையை அவர்கள் உண்ண வேண்டும்.
அதில் 77 வயதான இவான் மெண்டல் என்பவர் அரை நிமிடத்தில் 10 கொழுக்கட்டைகளை சாப்பிட்டு முதல் பரிசை வென்றார். அதற்கு பரிசாக ஒரு லிட்டர் ஜார் கிரீம் கொடுக்கப்பட்டது. கிரீம் ஜாரை கையில் வாங்கியவுடன் அவர் தரையில் விழுந்தார். ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவர் இறந்துவிட்டார்.
ஆனால் இந்த போட்டியில் கலந்துகொண்டதால் அவர் இறக்கவில்லை என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து டோக்மாக் நகர அதிகாரிகள் எதுவும் கூறவில்லை.
மொத்தத்தில் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.












Click it and Unblock the Notifications