உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு சொத்து பட்டியல் அவசியம்- ஆணையம் உத்தரவு
நெல்லை: உள்ளாட்சி தேர்தலில் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினரைத் தவிர அனைவரும் தங்கள் சொத்து கணக்கு, கிரிமினல் வழக்கு விபரம் அடங்கிய அபிடவிட்டை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்கான படிவங்கள் அந்தந்த தேர்தல் அலுவலர் அலுவலகங்களி்ல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சிகளை விட கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு தான் அதிக அளவில் வேட்புமனுக்கள் தாக்கல செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களைத் தவிர அனைத்த பதவிகளுக்கும் போட்டியிடுபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அபிடவிட்டில் வேட்பாளர், அவரது மனைவி, மகன், மகள் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் விபரம், கையிருப்பில் உள்ள பணம், வங்கிகளின் கையிருப்பு விபரம், வெள்ளி நகைகள், வேட்பாளர்கள் பெயரில் உள்ள கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவி்ட்டுள்ளது.












Click it and Unblock the Notifications