திருச்சி மேற்கு இடைத் தேர்தல்- நாளையுடன் வேட்பு மனு தாக்கல் முடிகிறது
திருச்சி : திருச்சி மேற்குத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.
திருச்சி மேற்குத் தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கை செப்டம்பர் 19ம் தேதி வெளியானது. அன்றே வேட்பு மனுதாக்கலும் தொடங்கியது.
இத்தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்சோதியும், திமுக சார்பில் கே.என்.நேருவும் போட்டியிடுகின்றனர். கே.என்.நேரு கடந்த முறையும் போட்டியிட்டார். ஆனால் அவரை அதிமுகவின் மரியம் பிச்சை வீழ்த்தினார். அமைச்சராகப் பதவியேற்ற அவர் எம்.எல்.ஏ. பதவி ஏற்புக்குக் கிளம்பியபோதுதான் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால்தான் இங்கு இப்போது இடைத் தேர்தல் வந்துள்ளது.
இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இதுவரை பரஞ்சோதி, கே.என்.நேரு மற்றும் நான்கு சுயேச்சைகள் மனு தாக்கல் செய்துள்ளனர். கே.என். நேருவுக்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications