குஜராத்தில் மாபெரும் பேரணி நடத்தும் முதல்வர் நரேந்திர மோடி

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: அண்மையில் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று குஜராத்தில் மாபெரும் பேரணி நடத்தவிருக்கின்றார். இதில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் தான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேசிய ஒருமைப்பாட்டிற்காக 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில் இன்று தனது அரசுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை எதிர்த்து மாபெரும் பேரணி நடத்தவிருக்கிறார். இந்த பேரணி வஸ்த்ராலில் நடக்கிறது.

தான் நடத்திய பேரணிகளிலேயே இது தான் மிகப் பெரிய பேரணி என்று மோடி தெரிவித்துள்ளார். அநீதியை ஒழியுங்கள், குஜராத்தை காப்பாற்றுங்ள் என்று கோஷமிடவிருக்கின்றனர்.

குஜராத் மாநில ஆளுநர் மோடியிடம் கேட்காமலேயே ஊழலை விசாரிக்க லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசராணைக்கு வரவிருக்கையில் மோடி நடத்தும் இந்த பேரணி முக்கியத்துவம் பெறுகிறது.

பேரணி முடிவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி பேசவிருக்கிறார். இந்த கூட்டத்தில் குஜராத் மட்டுமின்றி பிற மாநிலத்தவர்களும் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோடி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தும் காங்கிரஸுக்கு தனது பலத்தை காண்பிக்கத் தான் இந்த பேரணியை மோடி நடத்துகிறார் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+