நேபாள விமான விபத்தில் தமிழர்கள் பலி-ஜெயலலிதா இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நேபாள விமான விபத்தில் திருச்சியைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளது குறித்து முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
நேபாளத்தில் 19 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் காத்மாண்டு விமான நிலையத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கையில் மலையில் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து விமானத்தில் பயணம் செய்த 19 பேரும் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
இந்த விமான விபத்தில் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. விமான விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications