தயாநிதி மாறன் மீது விரைவிலேயே எப்ஐஆர்: சுப்ரீம் கோட்டில் சிபிஐ உறுதி

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரி ஏர்செல் அதிபர் சிவசங்கரன் மனு செய்தார். ஆனால், அவருக்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்காத தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவன பங்குகளை தனது மலேசிய நண்பரான அனந்தகிருஷ்ணனுக்கு விற்குமாறு நிர்பந்தித்தகாகவும், இதையடுத்து சிவசங்கரன் அதை அனந்தகிருஷ்ணனின் அஸ்ட்ரோ நிறுவனத்துக்கு விற்றதாகவும்,
இந்த விற்பனையையடுத்து ஏர்செல்லுக்கு தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதாகவும், அதே நேரத்தில் அஸ்ட்ரோ நிறுவனம் சன் டிவியின் டிடிஎச் சேவையில் பல நூறு கோடிகளை முதலீடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவசங்கரன், தயாநிதி மாறன், சன் டிவி அதிபர் கலாநிதி மாறனிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
இந் நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நடந்தபோது ஆஜரான சிபிஐ வழக்கறிஞர், தயாநிதி மாறன் மீது விரைவிலேய முதல தகவல் அறிக்கை (எப்ஐஆர்) தாக்கல் செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications