திருச்சி தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க நடவடிக்கை- பிரவீன் குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு குறுக்கிடுவதால் திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.

திருச்சி மேற்குத் தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 17ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Praveen Kumar
ஆனால் அக்டோபர் 17ம் தேதி மற்றும் 19ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதால், திருச்சி இடைத்தேர்தல் முடிவு உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே திருச்சி வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து பிரவீன் குமார் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு வருவதால், திருச்சி மேற்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. எனவே அதை ஏற்று வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து அக்டோபர் 20ம் தேதிக்கு வாக்கு எண்ணிக்கை தள்ளிப் போகும் என்று தெரிகிறது.

பிரவீன் குமார் மேலும் கூறுகையில், திருச்சி மேற்குத் தொகுதியில் அனைத்து வாக்குச் சாவடிகளுமே பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே 5 கம்பெனி துணை ராணுவப் படையை பாதுகாப்புக்குக் கோரியுள்ளோம். அதில் 2 கம்பெனி படையினர் வந்து விட்டனர். வாக்குப் பதிவுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+