ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் இடத்தை அறிய வருகிறது புதிய திட்டம்

இந்தியாவில் அதிகளவில் மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஆனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில்களின் அளவு இல்லை. ரயில்களின் தாமதம் மற்றும் இருக்கும் இடம் ஆகியவற்றை அறிந்து கொள்வது சிரமமாக உள்ளது.
பயணிகளின் இந்த சிரமத்தை போக்கவே, 'பேபி சிம்ரன்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி செயற்கைகோளின் உதவியுடன் ரயில்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற தகவலை பெறலாம். 'சேட்லைட் இமேஜிங் பார் ரயில் நேவிகேஷன்' என்பதை சுருக்கி, 'பேபி சிம்ரன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் பரிசோதனை முறையாக ராஜதானி எஸ்பிரஸ் ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து அத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் கூறியதாவது, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆய்வு மற்றும் தரநிலை அமைப்பு உடன் ஐ.ஐ.டி. நிறுவனமும் இணைந்து செயலாற்றி வருகிறது. திட்டப்பணிகள் முடிவு நிலையை எட்டியுள்ள நிலையில் விரைவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
முதலில் 4 ரயில்கள் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன்பின் மற்ற ரயில்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். 100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், ஜி.பி.எஸ். நவிகேஷன் மற்றும் ரேடியோ அலைகள் மூலம் செயல்படும். இதன்மூலம் ரயில் நிலையங்களின் டிஜிட்டல் வரைபடத்தையும் பெற முடியும்.
இந்த திட்ட செயல்பாட்டிற்கு வரும் நிலையில், ஒருவரால் ரயில்கள் எங்கே இருக்கிறது, எத்தனை வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது உள்ளிட்ட தகவல்களை ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்து கொள்ளலாம், என்றார்.
நம்ம ஊர் ரயில்களுக்கு 'பேபி சிம்ரன்' என்று வருமோ?












Click it and Unblock the Notifications