வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கு- 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு உரிய நேரத்தில் நடத்தி முடிக்கப்படாமல், பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் விசாரணையின்போதே இறந்து விட்டனர். உயிருடன் உள்ள 215 பேர் மீதான தீர்ப்பை இன்று நீதிபதி குமரகுரு அறிவித்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பை அறிவதற்காக வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட கிராமத்தினர் நூற்றுக்கணக்கில் கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை முதல் நீதிபதி குமரகுரு தீர்ப்பை வாசித்து வந்தார். பிற்கல் ஒன்றரை மணியளவில் அவர் தீர்ப்பை வாசித்து முடித்தார். அதாவது எத்தனை பேர் குற்றவாளிகள் என்பதை சொல்லி முடித்தார்.
யார் யார் குற்றவாளி?
வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, உயிருடன் உள்ள 215 பேரில் வனத்துறையினர்தான் அதிகம். தீர்ப்பில் ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனப் பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோர் உள்ளிட்ட 126 வனத்துறையினர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு ஐஎப்எஸ் அதிகாரியான சிங்காரவேலு ஏற்கனவே இறந்து விட்டார்.
மேலும் 5 வனத்துறை ரேஞ்சர்களும் குற்றவாளிகள் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
காவல்துறையிலிருந்து 84 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் இன்ஸ்பெக்டர்கள், 6 பேர் சப் இன்ஸ்பெக்டர்கள். மற்றவர்கள் காவலர்கள்.
வருவாய்த்துறையிலிருந்து தாசில்தார் ஆவுடையப்பன், வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், கிராம நிர்வாக அதிகாரிகள் பொன்னுச்சாமி, ராஜு உள்ளிட்ட ஐந்து பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். அதன்படி அருணாச்சலம், ஆறுமுகம், ராஜகோபால், பெரியநாயகம், ராஜமாணிக்கம், பச்சியப்பன், வேடியப்பன், சிதம்பரம், பழனி, பெருமாள், காளியப்பன், ஜானகிராமன், ரத்னவேல், அழகிரி, மாதையான் உள்ளிட்ட 17 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
54 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர்
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் 29 வனத்துறையினர், 24 போலீசார், ஒரு வருவாய்த்துறை ஊழியர் உள்பட மொத்தம் 54 பேர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications