திருச்சி மேற்கு தொகுதியில் ஜெயலலிதா 9ம் தேதி பிரச்சாரம்
சென்னை: இடைத் தேர்தல் நடக்கும் திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா 9ம் தேதி பிரசாரம் செய்கிறார்.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 13.10.2011 அன்று நடைபெற உள்ள திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா 9.10.2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கழக வேட்பாளர் பரஞ்ஜோதியை ஆதரித்து திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்கண்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்,
1. பெரியார் சிலை பஸ் ஸ்டாண்டு
2. புத்தூர் நால் ரோடு
3. உறையூர் நாச்சியார் கோவில்
4. தென்னூர் மந்தை, பட்டாபிராமன் ரோடு, எம்.ஜி.ஆர். சிலை, கோர்ட்
5. செடல் மாரியம்மன் கோவில், மார்சிங் பேட்டை ரோடு, மேலப்புதூர் கண் மருத்துவமனை, சுப்பிரமணியபுரம் மேம்பாலம், டிவிஎஸ் டோல் கேட், ஜமால் முகமது கல்லூரி, சட்டக் கல்லூரி
6. காஜாமலை மெயின் ரோடு, மன்னார்புரம் பைபாஸ் ரோடு
7. எடமலைப்பட்டி புதூர் மெயின் ரோடு ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications