லிபியா அரசின் முன்னாள் செய்தி தொடர்பாளர் மூசா இப்ராஹீம் கைது
திரிபோலி: லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் செய்தி தொடர்பாளராக இருந்த மூசா இப்ராஹீம் பெண் போல மாறுவேடத்தில் வந்தபோது, புரட்சிப்படையினரிடம் சிக்கினார்.
லிபியாவில் அதிபர் கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக புரட்சி வெடித்து, கடந்த 6 மாதங்களில், நாடு முழுவதும் புரட்சி படையின் கைவசம் வந்துள்ளது. சில பகுதிகளில் தொடர்ந்து போர் நடந்து வருகிறது. தற்போது, புரட்சிப்படையின் இடைக் கால அரசு பதவி ஏற்றுள்ளது.
கடாபியின் குடும்பத்தினர் மற்றும் முக்கிய தலைவர்கள் லிபியாவில் வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ள நிலையில், கடாபி மட்டும் லிபியாவை விட்டு வெளியேறாமல் தலைமறைமாக உள்ளார். கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரத்தை புரட்சிப்படையின் கையின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பதில், கடாபி தனது ராணுவத்துடன் முயன்று வருகிறார்.
இந்நிலையில் சிர்த் நகரின் புறநகரில் கடாபியின் முக்கிய செய்தி தொடர்பாளர் மூசா இப்ராஹீமை நெருங்கிவிட்டதாக புரட்சிப்படைக்கு தகவல் கிடைத்தது. சிர்த் புறநகரில் கடும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, நகரத்தை விட்டு வெளியேறுபவர்களில் சிலர் காரில் வந்தனர். அதில் ஒரு காரில் தப்பி செல்ல முயன்ற மூசா இப்ராஹீம் புரட்சிப் படையினரிடம் சிக்கினார்.
அப்போது அவர் முஸ்லீம் பெண்களை போல பர்தா அணிந்திருந்து மாறுவேடத்தில் இருந்துள்ளார். முகத்திரையை விலக்கி பார்த்த போது, மூசா இப்ராஹீம் மாறுவேடத்தில் இருப்பது தெரிந்து உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த தகவலை அல்-ஹீர்ரா மிஸ்ரதா என்ற டிவி சேனலும், சில அரபு பத்திரிக்கைகளும் உறுதிப்படுத்தி உள்ளன. மூசா இப்ராஹீமின் குடும்பத்தார் பலரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications