தங்கம் தென்னரசு வெற்றி பெற்றதை எதிர்த்த மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
திருச்சுழி: தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை,
சென்னை உயர் மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில், திருச்சுழி தொகுதியில், தி.மு.க. சார்பில் தங்கம்
தென்னரசு-ம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் இசக்கிமுத்து உள்ளிட்ட பலர்
போட்டியிட்டனர். இதில் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றார்.
இவரது வெற்றியை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் மூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர்
இசக்கிமுத்து மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின் போது, தனது
அமைச்சர் பதவியை தங்கம் தென்னரசு தவறாகப் பயன்படுத்தி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்.
இது குறித்து, தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே,
தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, மக்கள்
பிரதிநிதித்துவச் சட்டத்தில் கூறியுள்ளபடி, மனு அமைந்திருக்கவில்லை என்று கூறி மனுவை
தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications