விசைத்தறி உரிமையாளர்கள் 6வது நாளாக உண்ணாவிரதம்-ரூ. 1000 கோடி உற்பத்தி இழப்பு
திருப்பூர்: திருப்பூர், கோவை மாவட்டங்களில் நூறு சதவிகித கூலி உயர்வு கோரி ஆறாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விசைத்தறி உரிமையாளர்களின் நிலை கவலைக்கிடமாகியுள்ளது.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் இரண்டு லட்சம் விசைத்தறிகள் இயங்கிவருகின்றன. இந்த விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து நூல் வாங்கி கூலிக்கு நெசவு செய்து தருகின்றனர். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் கூலி உயர்வு செய்யப்படுகிறது.
அந்த ஒப்பந்தம் காலவதியாகி 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்பொழுது உள்ள விலைவாசிக்கு ஏற்ப அவர்கள் நூறு சதவிகித கூலி உயர்வு கேட்டு வருகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் 25 சதவிகித கூலி உயர்வு மட்டுமே தரமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.
கூலி உயர்வு கோரி ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூலி உயர்வுக்காக ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் அவை தோல்வியில் முடிந்ததால் பல்லடம், சோமனூர், சூலூர் உள்ளிட்ட ஆறு ஊர்களில் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
ஆறாவது நாளாக உண்ணாவிரதம்
ஆறு நாட்களாக ஆயிரக்கணக்கானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பலரது நிலை கவலைக்கிடமாகியுள்ளது. பலர் மயக்கமடைந்து வருகின்றனர். அவர்களுக்கு உண்ணாவிரதப் பந்தலிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தங்களின் நிலை அறிந்து அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரம் கோடி இழப்பு
திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஒரு மாதங்களுக்கு மேலாக விசைத்தறிகள் இயங்காத காரணத்தினால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மாற்றுவழி தெரியாத்தால் தொழிலாளர்கள் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications