பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய புதுவை அமைச்சர்-காங். போராட்டம்!

என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவர் ரங்கசாமி அமைச்சரவையில் போக்குவரத்து, கல்வி அமைச்சராக உள்ளார். இவர் பத்தாம் வகுப்பைக் கூட முடிக்காதவர். கடந்த 1991ல் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய இவர், அறிவியல், சோஷியல் சயின்ஸ் ஆகிய இரு பாடங்களிலும் தோல்வியுற்றார்.
தற்போது அமைச்சராகி விட்ட நிலையில் பத்தாம் வகுப்பை எப்படியாவது பூர்த்தி செய்ய விரும்பி தனித் தேர்வராக விண்ணப்பித்தார். அவருக்குத் திண்டிவனத்தில் உள்ள ஒரு பள்ளியில் மையம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு அவருக்குப் பதில் அவருக்குப் பக்கத்தில் இருந்தவர் பரீட்சை எழுதியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கல்யாண சுந்தரம் ஆள் மாறாட்டம் செய்து வி்டடதாக சர்ச்சை எழுந்துள்ளது. புதுச்சேரி காலாப்பட்டு காங்கிரஸார், கிழக்குக் கடற்கரைச் சாலையில் கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
பத்தாம் வகுப்பு தேர்வை ஆள் வைத்து எழுதிய அமைச்சரால் புதுச்சேரியில் பரபரப்பு நிலவுகிறது.
தமிழக கல்வித்துறை விசாரணை
இதற்கிடையே அமைச்சர் ஆள் வைத்து தேர்வு எழுதயி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசின் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்துப் புகார் வந்துள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
ஆனால் தன் மீதான புகார்களை கல்யாண சுந்தரம் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது பொய்யான புகார். என்னுடைய வளர்ச்சியைப் பொறுக்காமல் எதிர்க்கட்சியினர் இந்த அவதூறை சுமத்தி வருகின்றனர். நான்தான் தேர்வு எழுதினேன். இதுதொடர்பாக எந்த விசாரணை நடந்தாலும் அதை சந்திக்க நான் தயார் என்று கூறியுள்ளார் கல்யாண சுந்தரம்.
புதுவையில் என். ஆர் காங்கிரஸும், அதிமுகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. தேர்தல் முடிந்ததுமே கூட்டணி நொறுங்கிப் போய் விட்டது. அன்று முதல் இன்று வரை புதுச்சேரி அதிமுகவினர், ரங்கசாமி கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கல்யாண சுந்தரம் விவகாரம் புதுச்சேரி அதிமுகவினருக்குப் புதிய ஆயுதமாக வந்து அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இதை வைத்து ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி புதுவை அதிமுக தயாராகி வருகிறது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications