உள்ளாட்சித் தேர்தல் 'திருவிழா' எதிரொலி: கரை வேட்டி, துண்டு விற்பனை ஜோர்
நெல்லை: உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கட்சித் தலைவர்கள் கரை வேட்டி, துண்டு வாங்கிக் கொடுக்கின்றனர். இதனால் தற்போது கரை வேட்டி, துண்டு விற்பனை சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து கட்சிகளும் தற்போது தனித் தனியாக போட்டியிடுவதால் பலமுனை போட்டி நிலவுகிறது. மாவட்டங்களில் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும், தங்களது ஆதரவாளர்களுக்கு கட்சியின் கரை வேட்டிகள், துண்டுகளை வாங்கிக் கொடுத்து அவற்றை அணிந்து வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபடுமாறு கூறியுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தையொட்டி ஜவுளிக் கடைகளில் கட்சி கரை வேட்டி, துண்டுகளின விற்பனை சூடுபிடித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் புது ரக புடவைகள், சுடிதார்கள், குழந்தைகளுக்கு தேவையான உடைகளை வாங்கி ஜவுளிக்கடைக்காரர்கள் குவித்து வைத்துள்ளனர். ஆனால் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், கட்சி வேட்டி, துண்டுகளை கேட்டு தினமும் கடைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் தற்போது அவற்றை அதிகளவில் வாங்கி ஸ்டாக் வைத்துள்னர்.
இத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களுடைய கட்சி வேட்டி, துண்டுகளையும் தங்களது ஆதரவாளர்களுக்கு வாங்கிக் கொடுத்து வருகின்றனர். எனவே வேட்டி, துண்டு வியாபாரம் சூடுபிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications