9 மாத பெண் குழந்தை கொன்று கால்வாயில் உடல் வீச்சு
சுசீந்திரம்: சுசீந்திரம் அருகே உள்ள கால்வாயில் மிதந்த 9 மாத பெண் குழந்தை உடல் குறித்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே உள்ள சி.டி.எம்.புரத்தில் உள்ள அனந்தனார் கால்வாயில் பெண் குழந்தை உடல் கிடப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் கி்ராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துககு விரைந்தனர்.
இறந்து கிடந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட குழந்தை உடல் பிறந்து 9 மாதம் வயதே இருக்கலாம் என தெரிகிறது. இதை யாராவது அடித்து கொலை செய்து கால்வாயில் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் குழந்தையின் பெற்றோர் யார், குழந்தை இங்கு வீசப்பட்ட காரணம் உள்ளிட்ட விபரங்களை, சுசீந்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications