உயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

Subscribe to Oneindia Tamil

Two-day-old baby girl rescued after being buried alive
போபால்: போபாலில் விவசாய நிலத்தில் பெற்றோரால் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம், பாட்னா கிராமத்தில் நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது குழந்தை ஒன்றின் அழுகும் குரல் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி சென்ற விவசாயி நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையை கண்டெடுத்தார்.

நிலத்தில் உயிரோடு புதைக்கப்பட்ட குழந்தை தனது தலையை எப்படியே வெளியே நீட்டி அழுதது தெரிந்தது. குழந்தையை மீட்டு, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவர்கள் அந்த பெண் குழந்தைக்கு உடனடி சிகிச்சை அளித்தனர்.

பிறந்த 48 மணிநேரம் மட்டுமே ஆனது தெரிந்தது. பெண் குழந்தையை உயிரோடு புதைத்து சென்ற பெற்றோரை, போலீசார் தேடி வருகின்றனர். இந்தியாவில் பெண்களின் விகிதம் மிகவும் குறைந்து காணப்படும் மத்திய பிரதேச மாநிலத்தில் இதுபோன்ற பெண்சிசுக் கொலை சர்வ சாதாரணமாக இன்னும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+