ஜப்பானின் ஃபுகுஷிமாவில் இன்றும் நிலநடு்ககம்: அணு உலைக்கு பாதிப்பில்லை
டோக்கியோ: பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் நிலைகுழைந்துள்ள ஜப்பானின் ஃபுகுஷிமா பகுதியில் இன்று நண்பகல் 11. 45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தான் ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதில் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள அணு உலைகள் வெடித்தது. அந்த இரட்டைப் பேரழிவுகளில் 21,000 பேர் பலியானார்கள். அதில் இருந்தே ஜப்பான் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஃபுகுஷிமா பகுதியில் இன்று நண்பகல் 11. 45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்த நடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதை இயக்கி வரும் டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி தெரிவித்துள்ளது.
ஃபுகுஷிமாவில் இருந்து 245 கிமீ தொலைவில் உள்ள டோக்கியோவில் பல அடுக்குமாடிக் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications