உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம்- நாளை ஈரோட்டில் தொடங்குகிறார் சரத்குமார்
ஈரோடு: அதிமுக கூட்டணியில் எஞ்சியுள்ள கட்சிகளில் ஒன்றான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தனது உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை நாளை ஈரோடச்டிஸல் தொடங்குகிறார்.
ஈரோடு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 11-ம் தேதி முதல் பிரசாரம் செய்கிறேன். ஈரோட்டில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வரும் 13-ம் தேதி பிரசாரம் செய்ய உள்ளேன்.
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இந்திய கடல் எல்லையை மத்திய அரசு உடனடியாக வரையறை செய்ய வேண்டும். கடல் எல்லையில் இந்திய ராணுவத்தை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம் என பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியுள்ள மத்திய காங்கிரஸ் அரசு, ஆட்சிப் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தைப் பொறுத்தவரை, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தொடர் நடவடிக்கைகளை பிரதமர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றார்.
உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் முதல் ஆளாக விஜயகாந்த்தான் பிரசாரத்தைத் தொடங்கினார். தொண்டைத் தண்ணீர் வற்ற அவர் ஊர் ஊராகப் போய்ப் பேசி வருகிறார். மற்ற முக்கியத் தலைவர்கள் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடவில்லை. தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜி.கே.வாசன் போன்ற சிலர் மட்டுமே பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதிமுக கூட்டணித் தரப்பிலிருந்து பிரசாரம் செய்ய இதுவரை யாரும் களம் இறங்கவில்லை. இந்த நிலையில் ஒரு வழியாக சரத்குமார் தனது பிரசாரத்தை நாளை தொடங்குகிறார்.












Click it and Unblock the Notifications