எருமை மாடு மீது வைகை எக்ஸ்பிரஸ் மோதியதில் 3 மணிநேர போக்குவரத்து பாதிப்பு
திருச்சி: எருமை மாடு மீது வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் என்ஜின் பழுதாகியது. இதனால் 3 மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் தினமும் மதுரைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று, வழக்கம் போல சென்னையில் புறப்பட்டது. திருச்சியை நெருங்கிவிட்ட நிலையில், வாளாடி-லால்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்த போது, தண்டவாளத்தில் நின்ற எருமை மாடு மீது ரயில் மோதியது.
இதில் எருமை உடல்பாகங்கள் ரயில் என்ஜினில் சிக்கியதில் பழுதாகி வழியில் நின்றது. இதுகுறித்து ரயில் ஓட்டுநர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மாற்று இன்ஜின் மூலம் லால்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அங்கு பாயிண்ட் கோளாறால் ரயிலை தொடர்ந்து இயக்க முடியவில்லை.
பின்னர் கோளாறுகளை சரிசெய்து, இரவு 9 மணியளவில் வைகை எக்ஸ்பிரஸ் திருச்சியை வந்தடைந்தது. இன்ஜின் பழுது காரணமாக வைகை எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் நின்றதால், அவ்வழியாக சென்ற ரயில்கள் அனைத்தும் தாமதமாகவே இயக்கப்ப்ட்டது. வைகை எக்ஸ்பிரஸ் பயணிகளும் 3 மணிநேரம் தாமதமாக திருச்சி சென்றடைந்தனர்.












Click it and Unblock the Notifications