Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு கள்ள நோட்டு கொடுத்த பெண் சுயேட்சை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி 56வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வாக்காளர்களுக்கு கொடுத்த பணம் கள்ள நோட்டு என தெரிய வந்துள்ளது. அவரிடம் பணம் வாங்கிய வாக்காளர் ஒருவர் கோவில் திருவிழாவில் மாற்ற முயன்றபோது குட்டு வெளிபட்டது.

தூத்துக்குடி அருகே உள்ளது அத்திமரப்பட்டி. தூத்துக்குடி நகராட்சி மாநகராட்சி ஆனபோது அத்திமரப்பட்டி பஞ்சாயத்து அதில் இணைக்கப்பட்டு 56வது வார்டாக ஆக்கப்பட்டது. தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் இந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு தி்முக, அதிமுக சுயேட்சைகள் என 8 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட வரும் நிலையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் எப்படியும் தான் வெற்றி பெற்றேத் தீர வேண்டும் என்று தீவிரம் காட்டி அதற்காக குறுக்கு வழியில் இறங்கினார். தேர்தல் ஆணையம் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுப்பதற்கு தடை விதித்திருக்கின்றது. இருப்பினும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீடு, வீடாகச் சென்று ரகசியமாக ரூ. 500 கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த பணத்தை வாங்கிய வாக்காளர் ஒருவர் குடும்பத்துடன் குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் திருவிழாவிற்கு சென்றார். அங்குள்ள கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வேட்பாளர் கொடுத்த ரூ. 500ஐ கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த கடைக்காரர் அதை கள்ள நோட்டு என தெரிவித்தார்.

சாமி கும்பிட்டுவிட்டு நேராக ஊருக்கு வந்த அவர் பெண் வேட்பாளரிடம் சென்று கள்ள நோட்டு கொடுத்து எங்களை ஏமாற்ற பார்க்கிறீர்களா என்று கூறி அவர் கொடுத்த ரூ.500ஐ தூக்கி எறிந்தார். இது வேட்பாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நல்ல நோ்ட்டு தானே கொடுத்தோம். இதில் கள்ள நோட்டு எப்படி வந்தது என அவரும் குழம்பினார்.

இதற்கிடையே கள்ள நோட்டுடன் வந்த வாக்காளர் ஊரில் உள்ள தங்களது உறவினர்களிடம் இது பற்றி கூறிவிட்டார். விவகாரம் பெரிதாகி விட்டதால் பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த அந்த பெண் வேட்பாளர் யார், யாருக்கெல்லாம் பணம் கொடுத்தாரோ அவர்களிடம் எல்லாம் சென்று நிலைமையை விளக்கி அந்த பணத்தை திரும்ப வாங்கிக் கொண்டார். (அதற்கு பதில் நல்ல நோட்டு கொடுக்கவில்லையாம்)

4 சுவற்றுக்குள் மடக்கிவிடலாம் என நினைத்த கள்ள நோட்டு விஷயம் காட்டுத் தீ போல பரவி முத்தையாபுரம் போலீசார் காதுக்கும் எட்டியது. அவர்கள் அத்திமரபட்டி சென்று சம்பந்தப்பட்ட பெண் வேட்பாளாரிடம் விசாரணை நடத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+