விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆசிட் ஊற்றி, கழுத்து வெட்டப்பட்டு கொலை
சீர்காழி: உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்யிடும் வேட்பாளர் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா மேலசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கட்டையன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச்சார்பில் காரைமேடு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
மேலும், மேலசாலை கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடும் வனிதாவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு இவர் ஒரு வாய்க்கால் அருகே கழுத்து வெட்டிப்பட்டு, முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி அவரது கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சீர்காழி- தரங்கம்பாடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications