அன்னா ஆதவாளர்கள் மீது பகத் சிங் கிராந்தி சேனே பயங்கர தாக்குதல்-3 பேர் காயம்
டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து அன்னா ஹஸாரேவின் ஆதரவாளர்களை பகத் சிங் கிராந்தி சேனே ஆட்கள் பயங்கரமாக அடித்து நொறுக்கினர். இதில் காயம் அடைந்த 3 பேர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அன்னா ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷனை நேற்றுதான் பகத் சிங் கிராந்தி சேனே அமைப்பைச் சேர்ந்த 3 பேர் அவரது அறையில் வைத்தே அவரை சரமாரியாகத் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவரை ஆர்.எம். எல். மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காஷ்மீர் விவகாரம் குறித்து அவர் சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியதால் தான் தாக்கினோம் என்று அந்த அமைப்பு பேஸ்புக்கில் தெரிவித்திருந்தது.
இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த பரபரப்பே இன்னும் அடங்கவில்லை அதற்குள் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து அன்னா ஆதரவாளர்களை பகத் சிங் கிராந்தி சேனே ஆட்கள் அடித்து நொறுக்கினர். இதில் காயம் அடைந்த 3 பேரை அருகில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனால் அன்னா குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரசாந்த் பூஷன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் பூஷனையும், அன்னா ஆதரவாளர்களையும் தாக்கியது ஸ்ரீ ராம சேனே என்று சிலரும், பகத் சிங் கிராந்தி சேனே என்று சிலரும் கூறியுள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications