பிரதமர் பதவி: நரேந்திர மோடியுடன் போட்டியில்லை- அத்வானி

ஊழலுக்கு எதிராக அத்வானி ரத யாத்திரையை அறிவித்தவுடன், நரேந்திர மோடி சமூக நல்லிணத்தை முன் வைத்து 3 நாட்கள் உண்ணாவிரதம் நடத்தினார். மேலும் இப்போதும் மாவட்டத் தலைநகர்களில் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.
இதையடுத்து இருவரும் பிரதமர் பதவிக்கு போட்டா போட்டி போட ஆரம்பித்துள்ளதாக செய்திகள் பரவின.
இந் நிலையில் தற்போது ரத யாத்திரையில் உள்ள அத்வானி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் தலைப்புச் செய்திகளுக்காக நானும் மோடியும் போட்டா போட்டியில் ஈடுபடுவதாக செய்திகளை வெளியிடுகின்றன.
மோடி தற்போது மீண்டும் துவாரகாவில் உண்ணாவிரதம் இருப்பது அவர் முன்பு அகமதாபாத்தில் 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோதே அறிவிக்கப்பட்டிருந்ததுதான். எனது இந்த யாத்திரையின் பின்னணி, எங்களது கட்சியின் முன்னாள் எம்பிக்களை கைது செய்ததால் ஏற்பட்ட அதிருப்தியால் அறிவித்தது தான்.
இந்த யாத்திரை என்னை நானே ஒரு புதிய வடிவில் முன்னிறுத்திக் கொள்வதற்காக அல்ல. இந்த யாத்திரை எனக்காகவோ அல்லது கட்சிக்காகவோ அல்ல. ஊழல் காரணமாக வெறுப்படைந்துள்ள மக்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தவே இந்த ரத யாத்திரையை மேற்கொண்டுள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications