அமெரிக்க சலூன் கடையில் துப்பாக்கி சூடு: 6 பெண்கள் உட்பட 8 பேர் பலி
கலிபோர்னியா: அமெரிக்காவில் சலூனில் புகுந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டதில் 8 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலபீச் என்ற பகுதியில் மெரிடேஜ் என்ற பெயரில் சலூன் கடை ஒன்று உள்ளது. பகல் நேரத்தில் பரபரப்பாக இருந்த போது, அந்த கடைக்கு வந்த மர்மநபர் ஒருவன் அங்கிருந்த வாடிக்கையாளர்களை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில் 5 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். பலர் உயிரை காப்பாற்றும் முயற்சியில் தப்பியோடினர். அப்போது சிலர் லேசானது முதல் பலத்த காயமடைந்தனர். அந்த சம்பவத்திற்கு பின் மர்மநபர் அங்கிருந்து தப்பியோட கடையை விட்டு வெளியே வந்தான்.
கடையின் முன் இந்த சாலை வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி அதில் தப்பி ஓடினான். அவனை 1 கி.மீ. துரத்தி சென்ற போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அதிகளவிலான ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர் குறித்த தகவல்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.
சலூன் கடையின் உரிமையாளருடன் இருந்த முன்பகையை தீர்த்து கொள்ளவே, இந்த தூப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக, அப்பகுதியினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications