பா.ஜ.க. நிர்வாகிகள் லஞ்சம் வாங்கினால் கட்சியில் இருந்து நீக்கம்: ஹெச்.ராஜா
பரமக்குடி: பா.ஜ.க. கவுன்சிலர்கள் லஞ்சம் பெற்றார்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் 24 மணிநேரத்தில் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
பரமக்குடியில் நகராட்சி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பா.ஜ.க.மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா பிரச்சாரத்தின் போது கூறியதாவது, அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டம் வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதனால் தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு, கோபமடைந்து அவரை சிறையில் தள்ளியது.
மேலும், ஊழலுக்கு எதிரான இந்தியா என்று இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நகராட்சியில் பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ், நகர வடிவமைப்பு, குடிநீர் இணைப்பு என எதை எடுத்தாலும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே காரியம் நடக்கின்றது.
உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் வெற்றி பெற்றவர்கள் லஞ்சம் பெற்றார்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால், 24 மணி நேரத்தில் அவர்களை கட்சியில் இருந்து நீக்க தயராக உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications