பபுவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
சிட்னி: பசிபிக் தீவு நாடான பபுவா நியூ கினியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
பசிபிக் தீவு நாடான பபுவா நியூ கினியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 45 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது நிலத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டதா அல்லது கடல் பகுதியை மையமாக வைத்து ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.
இதனால் கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் வந்து நின்றனர். இந்த நிலநடுக்கத்தால் லே நகரத்தில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பபுவா நியூ கினியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். கடந்த 1998ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.