கீழப்பாவூர் பேரூராட்சி வார்டு சுயேச்சை வேட்பாளர் திடீர் மரணம்
தென்காசி: கீழப்பாவூர் பேரூராட்சி வார்டு வேட்பாளர் திடீரென இறந்தார். இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கீழப்பாவூர் வாணியர் மேலத்தெருவை சேர்நதவர் முருகேசன். இவர் கீழப்பாவூர் பேரூராட்சி 11வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டார். நேற்றிரவு பிரச்சாரத்தை முடித்து விட்டு வீட்டில் வந்து படுத்தார். இன்று காலை பிரச்சாரம் செய்வதற்காக அவரது ஆதரவாளர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர் படுக்கையில் இறந்து கிடப்பதை கண்டு அதி்ர்ச்சி அடைந்தனர். மாரடைப்பில் அவர் இறந்ததாக தெரிகிறது.
தகவல் அறிந்த பேரூராட்சி திமுக வேட்பாளர் பொன் அன்பழகன், அதிமுக வேட்பாளர் காளிமுத்து, காங் வேட்பாளர் செலவன், சுயேட்சை வேட்பாளர் விவேகானந்தன் மற்றும் தேமுதிக, பாஜ வேட்பாளர்கள் அங்கு சென்று முருகேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இவருக்கு முப்புடாதி என்ற மனைவியும், சுந்தர், சங்கர் என்ற மகனும், காந்தமதி என்ற மகளும் உள்ளனர். வீரகேரளம் புதூர் தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக வேலை பார்த்து வந்த முருகேசன் கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications