அணுமின்நிலைய பிரச்னை: மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் விலை உயர்வு

Subscribe to Oneindia Tamil

ஆறுமுகநேரி: புன்னக்காயலில் கடந்த ஒரு வாரமாக படகுகள் மீன்பிடிக்கச் செல்லாததால் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் உள்ளதால் இந்த நிலை.

கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்னை தொடர்பாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் இருந்த மீன்பிடி படகுகள் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மீன்பிடிக்கச் சென்று வந்ததால் ஏறி இருந்த மீன் விலை கணிசமான அளவு குறைந்திருந்தது.

இதற்கிடையில் தற்போது மீண்டும் கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்சனை தலைதூக்கி போராட்டம் தொடர்வதால் கடற்கரையோர கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தற்போது மீன் வியாபாரிகள் தூத்துக்குடியிலிருந்து மட்டுமே மீன் எடுத்து விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிடித்த உடனே கிடைத்த மீன்கள் இப்போது ஐஸ் வைத்து விற்கும் நிலையில் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமை தலைகீழாக மாறிவிட்டதால் மீன்விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மேலும் மீனவர்களின் போராட்டம் தொடர்ந்தால் ஆத்தூர் மற்றும் ஆறுமுகநேரி சுற்றுப்பகுதியில் முற்றிலுமாக மீன் வரத்து நின்று கடும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+