வக்கீல்களின் தொடர் போராட்டம் எதிரொலி-இழுத்து மூடப்பட்ட கோவை எஸ்.பி. அலுவலகம்
கோவை: கோவையில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய காவலரைக் கைது செய்யக் கோரி நடைபெறும் தொடர் போராட்டத்தின் காரணமாக கோவை எஸ்.பி. அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் என்பவர் கோவை அருகே உள்ள துடியலூர் காவல் நிலையத்திற்கு சென்று தகவல் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை காவலர்கள் சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால், துடியலூர் பெண் எஸ்.ஐ ரேணுகாதேவி உள்பட 5 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால், வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய காவலர்களை கைது செய்யக் கோரி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மேலும், கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தை வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர்.
வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் காரணமாக, கோவை மாவட்ட எஸ்.பி.அலுவலகம் பூட்டப்பட்டது. இதனால் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய காவலரைக் கைது செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் நீடிக்கும் என்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நீதிமன்ற பணிகள் மற்றும் காவல்துறை பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications