வக்கீல்களின் தொடர் போராட்டம் எதிரொலி-இழுத்து மூடப்பட்ட கோவை எஸ்.பி. அலுவலகம்
கோவை: கோவையில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய காவலரைக் கைது செய்யக் கோரி நடைபெறும் தொடர் போராட்டத்தின் காரணமாக கோவை எஸ்.பி. அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் என்பவர் கோவை அருகே உள்ள துடியலூர் காவல் நிலையத்திற்கு சென்று தகவல் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை காவலர்கள் சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால், துடியலூர் பெண் எஸ்.ஐ ரேணுகாதேவி உள்பட 5 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால், வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய காவலர்களை கைது செய்யக் கோரி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மேலும், கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தை வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர்.
வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் காரணமாக, கோவை மாவட்ட எஸ்.பி.அலுவலகம் பூட்டப்பட்டது. இதனால் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய காவலரைக் கைது செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் நீடிக்கும் என்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நீதிமன்ற பணிகள் மற்றும் காவல்துறை பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications