வக்கீல்களின் தொடர் போராட்டம் எதிரொலி-இழுத்து மூடப்பட்ட கோவை எஸ்.பி. அலுவலகம்
கோவை: கோவையில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய காவலரைக் கைது செய்யக் கோரி நடைபெறும் தொடர் போராட்டத்தின் காரணமாக கோவை எஸ்.பி. அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் என்பவர் கோவை அருகே உள்ள துடியலூர் காவல் நிலையத்திற்கு சென்று தகவல் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை காவலர்கள் சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால், துடியலூர் பெண் எஸ்.ஐ ரேணுகாதேவி உள்பட 5 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஆனால், வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய காவலர்களை கைது செய்யக் கோரி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மேலும், கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தை வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர்.
வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் காரணமாக, கோவை மாவட்ட எஸ்.பி.அலுவலகம் பூட்டப்பட்டது. இதனால் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரனை தாக்கிய காவலரைக் கைது செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் நீடிக்கும் என்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நீதிமன்ற பணிகள் மற்றும் காவல்துறை பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications