2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் முடிவுக்கு வந்தது
சென்னை: தமிழகத்தில் 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
தமிழகத்தில் முதல் கட்டமாக 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள் மற்றும் 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இன்று முதல் கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது.
இதையடுத்து 19ம் தேதி 2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெறும்.
இதற்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இறுதி நாள் என்பதால் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தீவிரமாக இருந்தது.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிராசரத்தை முடுக்கி விட்டிருந்தனர். வாகன ஊர்வலம், ஆட்டோக்களில் மைக்குகளை கட்டி அலறுவது என படு தீவிரமாக இருந்தது இறுதிக் கட்ட பிரசாரம்.
19ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். முதல் கட்ட வாக்குப் பதிவில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகவும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் மொத்தமாக புகார் கூறியுள்ளன. எனவே 2வது கட்டத் தேர்தலிலாவது இந்தக் குறைகள் எழாமல் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications