சட்டசபை தேர்தலைப் போல் உள்ளாட்சித் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறச் செய்வார்கள்: ஜெ. நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil

முதல்வர் ஜெயலலிதா சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இன்று காலை 9. 45 மணிக்கு வாக்களித்தார்.
வாக்களித்துவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் அதிமுகவுக்கு அமோக ஆதரவளித்து தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்தனர். நாங்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டியுள்ளோம். நல்ல நிர்வாகத்தை கொடுத்துள்ளோம். மக்களுக்காக பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
எப்படி சட்டசபை தேர்தலில் எங்களுக்கு அமோக ஆதரவு கொடுத்தார்களோ அதே போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக ஆதரவு கொடுப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications