தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விரைவில் தொடருவோம்- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாத தேர்தல் ஆணையம் மீது வக்கீல்களுடன் கலந்து பேசிய பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மாநில தேர்தல் ஆணையத்தின் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.

இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

சென்னையில் பல வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டு போடப்பட்டது தொடர்பாக நிச்சயமாக நீதிமன்றத்தை அணுகுவோம்.

அனைத்து பூத்'களிலும் வெப்-கேமராக்கள் பொருத்தப்பட வேண்டுமென்று உயர்நீதிமன்றம் கூறியவாறு செய்யாமல், அதன் உத்தரவு மீறப்பட்டுள்ளது. அதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து வக்கீல்களோடு கலந்து பேசி முடிவெடுப்போம். விரைவில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.

வாக்குப்பதிவு மிக குறைவாக உள்ளது குறித்து குறிப்பாக சென்னையில் மிகக் குறைந்த வாக்குகள் பதிவானது குறித்த கேள்விக்கு, அ.தி.மு.க.வின் மாவட்ட மற்றும் உள்ள பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் இந்த தேர்தலை அராஜகத்தால் சந்திப்பது என்று முடிவுகட்டிய நிலையை உணர்ந்து வாக்காளர்கள் வெளியே கிளம்பவே பயந்திருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.

மறு வாக்குப் பதிவு கோருவீர்களா என்ற இன்னொரு கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்கையில், எங்கெங்கே தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் வேண்டுமென்று கேட்போம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+